search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோவில்"

    திருமண பிரார்த்தனை தலம் என்று புகழ் பெற்றுள்ள திருவிடந்தை அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில் மகா சம்ப்ரோக்சணம் (கும்பாபிஷேகம்) இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
    திருமணம் கைகூடும் திருத்தலம், திருமண பிரார்த்தனை தலம் என்றெல்லாம் புகழ் பெற்றுள்ள திருவிடந்தை அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில் மகா சம்ப்ரோக்சணம் (கும்பாபிஷேகம்) நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

    சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவில் திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் கோவில் இருக்கிறது. இது சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானது. கி.பி. 8-ம் நூற்றாண்டை சேர்ந்த திருமங்கை யாழ்வார் திருவிடந்தைப் பெருமாளை போற்றி 13 பாசுரங்கள் பாடியுள்ளார். 108 திவ்ய தேசங்களில் 62-வது திவ்ய தேசமாக இந்த தலம் போற்றப்படுகிறது.

    இந்த ஊரின் பெயர் நித்யகல்யாணபுரி, கடவுளின் பெயர் நித்யகல்யாணப் பெருமாள் கோவில் விமானம் கல்யாண விமானம், திருக்குளத்தின் பெயர் கல்யாண தீர்த்தம். ஆதிவராகப் பெருமாளும் அகிலவல்லி நாச்சியாரும் ஏன் கோமளவல்லித் தாயாரும் தினசரி காட்சி தருவதும் கல்யாணக் கோலத்தில் தான். ஆலயத்தின் தல மரமாக, மணவிழாவிற்கு உகந்த புன்னை மரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கல்யாணங்களின் போது மாப்பிள்ளை, பெண்ணுக்குக் கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைப்பார்கள், அதுபோல் இயற்கையாகவே நித்யகல்யாணப் பெருமாளுக்கும், கோமளவல்லித் தாயாருக்கும் திருஷ்டிப் பொட்டு அமைந்திருப்பது இங்கே பேரதிசயம். பெருமாளுக்கு இங்கே தினந்தோறும் கல்யாணம் நடக்கிறது. 108 திவ்ய தேசங்களுள் இத்திவ்ய தேசத்தில் மட்டுமே ஆண்டின் 365 நாட்களிலும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. வேறு எந்த திவ்ய தேசத்துக்கும் இந்த சிறப்பு கிடையாது.

    இங்குள்ள பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்று பெயர். 360 கன்னிகள் சேர்ந்து ஒருங்கே உருவானதால், வராகரின் இடபாகத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லித் தாயார் என்றும் வருடம் பூராவும் திருமணம் செய்து கொண்டதால், வராகருக்கு, நித்யகல்யாணப் பெருமாள் என்றும், இந்த தலம் நித்திய கல்யாணபுரி என்றும் பெயர்கள் ஏற்பட்டன. 360 பெண்களில் மூத்தவளின் பெயர் கோமளவல்லி என்பதால், இங்கே தனிக் கோவிலில் காட்சி தரும் தாயாருக்கும் கோமளவல்லி என்றே பெயர்.

    திரு (லட்சுமி)வை தனது இடது பக்கத்தில் பெருமாள் வைத்துக் கொண்டதால், இந்த ஊருக்குத் திருஇடவெந்தை என்ற பெயர் ஏற்பட்டது. தேவியைத் தனது இடப்பக்கத்தில் எழுந்தருள வைத்து சரம ஸ்லோகத்தை உலகத்தாருக்கு உபதேசித்து அருளினார். (இதுபோல மனைவியை வலது பக்கத்தில் வைத்துக் கொண்டு, வராகர் காட்சி தரும் திருவலவெந்தை என்ற கோவில் மகாபலிபுரத்தில் இருக்கிறது.) கோமளம் என்ற தாயாரின் பெயர் திரிந்தே கோவளம் என்ற பெயரும் ஏற்பட்டது.

    தோரண வாயிலின் மேல் மண்டபத்தில், ஸ்ரீஆதிரராக மூர்த்தி தேவியுடன் இருக்கும் சுதையிலான சிற்பம் எழிலுற அமைக்கப்பட்டுள்ளது. அதை அடுத்துள்ள மண்டபத்தின் கல் தூண்களில் அழகிய புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. ஸ்ரீ மகாவிஷ்ணு, காளிங்க நர்த்தனார், நரசிம்மர் ஆகியவர்களின் சிற்பங்கள் மிக அற்புதமாக உள்ளன. அதைக் கடந்து சென்றால் ராஜகோபுரம், பலி பீடம், கொடிக் கம்பத்தைக் காணலாம். கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் 6 1/2 அடி உயரம் உள்ள கல் விக்ரகமாக - இடது காலை மடக்கி ஆதிசேஷன் தலை மீது வைத்து, அத்தொடையில் அகிலவல்லித் தாயாரைக் தாங்கி கொண்டு அற்புதமாக வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின் கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேஷன் உள்ளார்.

    உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ரகங்களாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய சிறப்புடைய இந்த தலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் திருப்பணிகள் அனைத்தும் பார்த்து, பார்த்து செய்யப்பட்டுள்ளன.

    குறிப்பாக கற்களில் எங்கெல்லாம் வெடிப்பு, கீறல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து சீரமைத்துள்ளனர். 1200 ஆண்டுகளுக்கு முன்பே உருவான இந்த கோவிலில் சேர, சோழ, பல்லவ, பாண்டிய மன்னர்கள் ஏராளமான திருப்பணிகளை செய்துள்ளனர்.

    இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும், நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை, இந்த உலகுக்கு எடுத்துக்காட்டும் அற்புத சுரங்கங்களாக உள்ளன. இதனால் அந்த கல்வெட்டுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதபடி திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

    இந்த திருப்பணிக்கு மத்திய தொல்லியல் துறை மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும், பக்தர்களும் நிதி உதவி செய்துள்ளனர். என்றாலும் திருப்பணிகள் 4 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில்தான் நிறைவுக்கு வந்துள்ளது.

    இந்த திருப்பணி காரணமாக திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் ஆலயம் புத்துணர்ச்சி பெற்று ‘பளிச்’சென மாறி உள்ளது. திருமண பிரார்த்தனைக்காக வருகை தரும் பக்தர்கள் மனதில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று அங்கு யாக சாலை பூஜைகள் தொடங்கின. நேற்று முன்தினம் காலை அனுக்ஞையுடன் சிறப்புப் பூஜைகள் நடந்தன. வாஸ்து சாந்தி செய்யப்பட்டு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது. நேற்று முன்தினம் மாலை இதிகாச புராண திவ்ய பிரபந்தம் தொடங்கப்பட்டது. அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமம் வளர்த்தனர்.

    இன்று (புதன்கிழமை) காலை மகாசாந்தி ஹோமம் நடத்தப்பட்டது. இன்று மதியம் பிம்பவாஸ்து செய்யப்பட்டு, நவகலச ஸ்தாபனம் நடந்தது. இன்று பிற்பகலில் சர்வதேவார்ச்சனம் நடத்தப்பட்டு பிரதான அதிவாச ஹோமங்கள் செய்யப்படுகிறது.

    இன்று (வியாழக்கிழமை) விளம்பி ஆண்டு வளர்பிறை சப்தமி திதியும் உத்திரட்டாதி நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா சம்ப்ரோக்சணம் (கும்பாபிஷேகம்) நடைபெற உள்ளது. அப்போது பிரம்மதோஷம், அனுக்கிரகம், வேத பிரபந்தம் சாற்று முறை நடைபெறும்.

    அதன் பிறகு தீர்த்தம் வினியோகம் செய்யப்படும். இதைத் தொடர்ந்து 11.30 மணிக்கு சுவாமி சர்வ தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். நாளை இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும்.

    இன்று கும்பாபிஷேக விழாவில் திருமலை, திருப்பதி ஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ பெரிய ஜீயர் சுவாமிகளும் சிறிய ஜீயர் சுவாமிகளும் கலந்து கொண்டு நித்ய கல்யாண பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.
    ×